காலை தொட்டு வணங்காததால் ஆத்திரம்: மாணவர்களை அடித்த ஆசிரியை பணி நீக்கம்

0
4

இந்தியா – ஒடி​சா​வில், தனது காலை தொட்டு வணங்​காத​தால் மாணவர்​களை அடித்த ஆசிரியை பண நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒடி​சா​வின் மயூர்​பஞ்ச் மாவட்​டம், பெட்​னோட்டி ஒன்​றி​யம் கண்​டதே​யுலா என்ற கிராமத்​தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்​ளது.

இப்​பள்​ளி​யில் கடந்த வெள்​ளிக்​கிழமை காலை இறைவணக்க கூட்​டத்​துக்கு பிறகு மாணவர்​கள் தங்​கள் வகுப்​பறை​களுக்கு திரும்பியுள்​ளனர். இந்​நிலை​யில் இப்​பள்​ளி​யின் ஆசிரியை ஒரு​வர் 6, 7 மற்​றும் 8-ம் வகுப்​பறை​களுக்கு சென்​று, பிரார்த்​தனைக்கு பிறகு தனது காலை ஏன் தொட்டு வணங்​க​வில்லை என்று கேட்டு 31 மாணவர்​களை மூங்​கில் குச்​சி​யால் அடித்​து உள்​ளார்.

இதுபற்றி தெரிய​வந்த பெற்​றோர்​கள் பள்ளிக்கு விரைந்து சென்​று, அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என வலி​யுறுத்​தினர்.

மேலும் பெற்​றோர்​கள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய பள்ளி மாணவர்​களிடம் ; கல்​வித் துறை அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை அறிக்​கை​யின் அடிப்​படை​யில் அந்த ஆசிரியையை அதி​காரி​கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here