மத்திய மலை நாட்டில் இன்று (06) காலை முதல் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக கினிகத்தென பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாள் உள்ள வீதி வெடிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து இன்று பிற்பகல் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனைக்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.