கிரிக்கெட்டில் கால் பதிக்கும் நடிகர் சூர்யா: சென்னை அணியை வாங்கினார்

0
80

நடிப்பை தாண்டி நடிகர் சூர்யா தயாரிப்பு பணிகளிலும் ஈடுபடுகிறார். இதற்கடுத்ததாக தனது ஆர்வத்தை விளையாட்டுத் துறையிலும் செலுத்த முயற்சி செய்து வருகிறார்.

அதன் முதல் படியாக ISPLT10 போட்டியில் சென்னை அணியை வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார் சூர்யா.இது குறித்த சூர்யாவின் சமூகவலைதள பதிவில், “வணக்கம் சென்னை! ISPLT10 இல் நம் சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிரேன்.

அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் சேர்ந்து விளையாட்டுத்திறன், கிரிக்கெட்டின் சிறந்து விளங்கும் பாரம்பரியத்தை உருவாக்குவோம்” என பதிவிட்டுள்ளார்.

Vanakkam Chennai! I am beyond electrified to announce the ownership of our Team Chennai in ISPLT10. To all the cricket enthusiasts, let’s create a legacy of sportsmanship, resilience, and cricketing excellence together.

Register now at https://t.co/2igPXtyl29!🏏#ISPL @ispl_t10… pic.twitter.com/fHekRfYx0i

— Suriya Sivakumar (@Suriya_offl) December 27, 2023
இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ISPLT10 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை நடிகர் அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here