கிரிபத்கொட பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் இரு வேறு சுற்றிவளைப்பில் போதைப் பொருட்களுடன் தொடர்புபட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது சுற்றிவளைப்பில் சந்தேக நபரிடமிருந்து 101 கிராம் 180 மில்லிகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இரண்டாவது சுற்றிவளைப்பின்போது 427 கிராம் 530 மில்லிகிராம் குஷ் போதைப்பொருள், 1 கிலோ 141 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 1,250,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் 24 வயதுடைய களனி மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.