நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட தலவாக்கலை கிரேட்வெஸ்டன் பகுதியில் நீர்த்தேக்கம் அமைப்பதுக்கு எதிராக கிரேட்வேஸ்டன் தோட்ட மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்கந்த வத்த காட்டுமாரியம்மன் ஆலய வளாகத்திலிருந்து ஊற்றெடுக்கும் ஆற்றிலிருந்து வரும் நீரை லூசா,கல்கந்தை,ஸ்கல்பா மலைதோட்டம் ஆகிய பகுதி மக்கள் உபயோகப்படுத்தியிருந்த நிலையில் தலவாக்கலை பகுதிகளுக்கு நீரை மாற்றி அனுப்ப நீர்வழங்கள் அமைச்சின் ஊடாக செயற்பாடுகள் முன்னெடுத்து வருவதாக கூறியே குறித்த ஆர்ப்பாட்டத்தை குறித்த தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக கிரேட்வெஸ்டன் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்




