கீழுழைப்புச் சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலை!

0
7

தற்சமயத்தில் நமது நாட்டில் அரச சேவையில் உயர் தகுதி பெற்ற பலர் கீழுழைப்புச் சேவையில் பணிபுரிந்து வருகின்றனர். கீழுழைப்புச் சேவை பட்டதாரிகளுக்கு நாட்டின் இலவசக் கல்வி முறையில் கற்பித்தல் சேவைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கான செல்லுபடியாகும் பட்ட தகுதி திகதியை 2025 டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதைய ஆசிரியர் போட்டிப் பரீட்சையில், வரையறுக்கப்பட்ட ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சையில் குறைபாடுகள் காணப்படுதால், கீழுழைப்புச் சேவையில் உள்ளோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெரியப்படுத்தும் முகமாக அதன் பிரதிநிதி குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த வேளையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றும் கூட, இளமானி மற்றும் முதுமானி பட்டங்களைப் பெற்று, அரச சேவையில் அலுவலக உதவியாளர்களாக, தொழிலாளர்களாக, ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிவோர் ஏராளமாக காணப்படுகின்றனர். இவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அரச சேவையில் கீழுழைப்புச் சேவையில் பணி புரிந்து வரும் பட்டதாரிகளுக்கு, பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடத்தப்படும் போட்டிப் பரீட்சையில் விண்ணப்ப காலம் 19 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன் இவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆகையினால், அரசாங்கம் பின்பற்றி வரும் முறையை மாற்றி, 2025 டிசம்பர் 31, செல்லுபடியாகும் வகையில் திகதியை திருத்தம் செய்து, கீழுழைப்புச் சேவையில் தற்போது சேவை புரிந்து வரும் பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதிமுறைகளில் சிக்கல்கள் காணப்படுகின்றன. இவை சரிசெய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here