குளவி கொட்டுக்கு இலக்கான மஸ்கெலியா, ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (08) இடப்பெற்றுள்ளது.
36 வயதான சிவா கனகரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கால்நடைகளுக்கு புல் சேகரிக்க சென்ற நிலையில் அவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை, டிக்கோயா -கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மரணித்துள்ளார்.
இவரது சடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது.