ஒவ்வொரு வருடமும் 19 வயதுக்குட்பட்ட 900க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளிடையே தட்டம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றுவரை (10) 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காய்ச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் இந்த நோயின் அறிகுறிகளில் என்றும், இந்த நோயின் ஆபத்துகள் குறித்து மக்கள் சரியாக அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த சில வருடங்களில் சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் 19 வயதுக்குட்பட்ட 900க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இதுதவிர, ஆண்டுதோறும் சுமார் 100 குழந்தைகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்கு போசாக்கான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும், சிறுவர்கள் தொடர்ந்து விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.