கூட்டு ஒப்பந்த பேச்சிவார்த்தைகள் மேலும் தாமதிக்க கூடும்- தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு

0
196

பெறுந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு இடையிலான பேச்சிவார்தை மேலும் தாமதிக்க கூடும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கள் தெரிவிந்துள்ளது

பெறுந்தோட்ட தொழிலாள்களுக்கு ஆயிரம் ருபா அடிப்படைம சம்பளம் வழங்கபட
வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்திடம் கூட்டு ஒப்பந்தததில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் வழிருத்தபட்டு வந்த கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஆயிரம் ருபா வழங்கமுடியாது எனவும் தோட்ட தொழிலாளர்களுக்கு 600ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதேவேலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பெறுந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு
ஒப்பந்தம் கைத்சாதிடபடுகிறது பழைய ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம்
நிறைவடைந்துள்ள நிலையில் புதிய கூட்டு ஒப்பந்த்திற்கான மூன்று கட்ட பேச்சிவார்த்தைகள் இனக்கபாடு இன்றி நிறைவடைந்துள்ள நிலையில் நான்ங்காம்கட்ட பேச்சிவார்த்தைக்கு இதுவரையிலும் முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு அறிவித்தல் வழங்கபட வில்லை என தொழிசங்கங்கள் தெரிவிக்கிறது

பெறுந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கபட
வேண்டு என பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்து வந்துள்ள போதிலும்
தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கபட வேண்டும்
என கோரி தொழில் துறை அமைச்சிக்கு அறிவிக்கபட வில்லை என முன்னால் தொழில்
துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார் இருந்த போதிலும் தொழிற்சங்கங்கள்
இதனை மறுத்து வருகின்றனர்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பெறுந்தோட்ட
தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பிலான பேச்சிவாரத்தை தாமதிக்க
கூடும் எனவும் தெரிவிக்கபடுவதோடு தோட்ட தொழிலாளர்களினால் முதலாளிமார்
சம்மேளனத்திற்கு எதிராக முன்னேடுக்கபடுகின்ற போராட்டங்கள் தங்களை
பாதிக்காது எனவும் பெறுந்தோட்ட கம்பணிகள் தெரிவிக்கின்றமை
குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here