2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (21) தாக்கல் செய்தார்.
இலங்கை குடிமகனிடமிருந்து வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் தற்போதைய 50 அமெரிக்க டொலர்களில் இருந்து 100 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படும்.
வெளிநாட்டினருக்கான நுழைவு கட்டணம் வர்த்தமானியால் அதிகரிக்கப்படவில்லை.
இது கெசினோ வரி மற்றும் நுழைவு கட்டணங்களை 2025 பட்ஜெட் முன்மொழிவுகளின் பிரகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.