முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஹெலிய ரம்புக்வெல்லர் இன்று (18) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டதையடுத்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.