கெஹெல்பத்தர தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நீடிப்பு!

0
5

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள கெஹெல்பத்தர பத்மே, அந்த திணைக்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட மாட்டார் என வழங்கப்பட்ட உறுதிமொழியை டிசம்பர் 2 ஆம் திகதி வரை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

தனது மகனின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி கெஹெல்பத்தர பத்மேவின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவின் இணக்கத்துடன் உறுதிமொழி நீட்டிப்பு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here