கொங்கிறீட் சிலிண்டரில் சிக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு- விசாரணை நடத்துமாறு கல்விச் செயலாளர் பணிப்பு.

0
206

கொங்கிறீட் சிலிண்டர் ஒன்றில் சிக்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பணித்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா காட்மொர் தமிழ் வித்தியாலயத்தில் நேற்று (04) ம் திகதி பகல் 1.30 மணியளவில் அப்பாடசாலையில் தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவன் பாடசாலைக்கு அருகாமையில் கொண்டு வந்து போடப்பட்டிருந்து கொங்கிறீட் சிலினடர்களில்; ஒன்று உருண்டதில் அதில் சிக்குண்டு மாணவன் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விநாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த கொங்கீறீட் சிலிண்டர்கள் நேற்று பகல் 12 மணியளவில் தோட்ட நிர்வாகத்தினால் கொண்டு பாடசாலைக்கு சமீபமாக உள்ள கழிவறைக்கு பக்கத்தில் மைதானத்தில் போடப்பட்டிருந்தாகவும் கழிவறை சென்ற மாணவர் குறித்த சிலிண்டர் போட்டப்பட்டிருந்த பகுதிக்கு சென்றபோது சிலிண்டர் உருண்டு மாணவனுடன் இழுத்து செல்லப்பட்டு பாடசாலை கட்டட சுவர் ஒன்றில்; மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்டு ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.

சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக பாடசாலையின் அதிபர் மஸ்கெலியா பொலிஸாரினால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சிலிண்டர்களை கொண்டு வந்தவர்கள் கைது செய்யப்படாலம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here