ஆபிரிக்க நாடான கொங்கோவில் இடம்பெற்ற இருவேறு படகு விபத்துகளில் குறைந்தபட்சம் 193 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈக்வடார் என்ற மாகாணத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இந்த விபத்துக்கள் சம்பவித்துள்ளன.
ஆபிரிக்காவில் பல நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகளின் செயற்பாடு உள்ளிட்டவற்றால் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வருகிறது. இதனால், அங்கிருக்கும் மக்கள் சட்டவிரோதமாக படகில் செண்டு வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அத்துடன் உள்நாட்டு பயணிகளும் படகு போக்குவரத்தை பயன்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் கொங்கோ ஆற்றில் 500 பயணிகளுடன் பயணித்த படகு தீப்பிடித்து பின்னர் கடலில் கவிழந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்த நிலையில் 200 இற்கு மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், மற்றுமொரு பகுதியில் மோட்டார் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.