கொட்டகலை டிரேட்டன் பகுதியில் 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் 13.08.2018 அன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றி வளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் குறித்த நபர்களால் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கேரளா கஞ்சா விற்பனை மிகவும் சூட்சபமான முறையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்ளை 14.08.2018 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
க.கிஷாந்தன், எஸ். சதீஸ்