கொட்டகலை பகுதியில் புகையிதத்தில் மோதி நபர் ஒருவர் பலி

0
142

கொட்டகலை பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்;தனர்.
இச்சம்பவம் இன்று (07) காலை 10.10 மணியளவில் கொட்டகலை சுரங்க வழி பாதைக்கு அருகாமையில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்டே இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மரணமடைந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவர் யார் என அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


சடலம் ஹட்டன் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாக புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது புகையிரதத்தில் மோதுண்டு இறந்தாரா? என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here