கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (5) இரவு 11.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ரிவால்வர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இன்று (6) அதிகாலை 1.40 மணியளவில் மருதானை,பஞ்சிகாவத்தை வீதியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு முன்னால் மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.