கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை விடுவிக்க தீர்மானம்….

0
169

துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள 81 சீனி கொள்கலன்களை விடுவிப்பதற்கு பெருந்தொகை கட்டணத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா நிதி இவ்வாறு கட்டணக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை(08) விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வணிக வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்க பெறும் பட்சத்தில் நாளை(08) பால்மா தொகுதிகளை விடுவிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் 360 மெற்றிக் டன் பால்மா தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here