ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை இணைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்ட முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியவற்றை இணைக்கும் பணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட ஈடுபாட்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சி சிறப்பு நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி- ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க,ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய மூவர் அடங்கிய குழுவை நியமிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களும் மேற்படி குழுவால் நடத்தப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.




