இலங்கை இளைஞர் சம்மேளனத்தின் 19வது தேசிய இளைஞர் மாநாடு மற்றும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச இளைஞர் தினம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் நடைபவணி நேற்று (06) நுவரெலியா நகரில் இடம்பெற்றது.
நுவரெலியா தபால் அலுவலகத்திற்கு அருகில் ஆரம்பமாகிய இளைஞர் நடைபவணியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.