சர்வதேச புனித பகவத் கீதை விழா 2024 இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்துக்களின் மிகவும் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை தொடர்பான தொடர் சமயச் செயற்பாடுகளுடன், புனித பகவத் கீதைக்கு பக்தர்கள்.அஞ்சலி செலுத்துவதற்காக, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்ரா மேம்பாட்டு சபையால் ஆண்டுதோறும் பகவத் கீதை விழா நடத்தப்படுகிறது.
சமீப ஆண்டுகளில், இந்த விழா வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டது, இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புனித பகவத் கீதை திருவிழா இலங்கையில் நடத்த முன்மொழியப்பட்டது.
இதன்படி, குறித்த விழாவை இலங்கையில் நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024 மார்ச் 01 முதல் 03 வரை நெலும் பொக்குன வளாகத்தில், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்ரா மேம்பாட்டு சபையின் நிதி அனுசரணையுடன் இந்த விழா நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.