சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலான அறிவிப்பு

0
81

அச்சடிக்கும் இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் குவிந்து கிடக்கும் சுமார் 9 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான மூன்று அச்சு இயந்திரங்கள் கிடைத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.மீதமுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் 6 மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பணம் பெற்றுக்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் மோசடி தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here