சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 களில் பிரபலமான குமரி, அரலிய, சரசி, சத்சரா மற்றும் ரெஜின போன்ற பத்திரிகைகளின் தலைமை ஆசிரியராக செயற்பட்டுவந்திருந்த அவர், ‘லக்பிம’ தேசிய வார இதழின் ஸ்தாபக ஆசிரியருமாவார்.