நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட ஒரு பெண்ணுடன் 5 பேர் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.