சிறுமி மர்ம மரணம்: சடலத்தில் அந்த உறுப்பு மாயம்

0
37

13 வயது சிறுமியின் படுகொலை செய்யப்பட்ட உடல் கரும்பு வயலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

அவர் பயங்கரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களின்படி, பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது சிறுமி மாயமானார்.

அவரது பெற்றோர், இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை என பொலிஸாரிடம் தெரிவித்தனர், ஆனால் போலிஸார் அப்போது புகாரைப் பதிவு செய்யவில்லை.மறுநாள் காலை, கிராமவாசிகள் சிறுமியின் உடலை மிகவும் சிதைந்த நிலையில் கண்டெடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிறுமியின் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.பின்னர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, புகாரைப் பதிவு செய்தனர்.

லகிம்பூர் கேரி காவல் கண்காணிப்பாளர் (SP) கணேஷ் பிரசாத் சாஹா, சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மூன்று விசாரணைக் குழுக்களை அமைத்தார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், பொலிஸாரின் செயலற்ற தன்மையே தனது மகளின் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

புகார் உடனடியாக பதிவு செய்து தேடுதலை தொடங்கியிருந்தால், இரண்டு நாட்களாக காணாமல் போன தனது மகளை காப்பாற்றியிருக்க முடியும் என அவர் கூறினார்.

SP கூறுகையில், “முதல் பார்வையில், சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது, ஏனெனில் உடலில் பல காயங்கள் உள்ளன. ஆனால், பிரேத பரிசோதனைக்கு பிறகே உண்மைகள் தெளிவாகும்.

கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உண்மையை கண்டறிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.”“குடும்பத்தினரிடம் பேசியபோது, அவர்கள் தற்போது யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here