நாவலப்பிட்டி மோன்ட்கிறிஸ்டோ தோட்டத்தில் நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வீடொன்றின் அறையில் சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் கழுத்து இறுகியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி மோன்ட்கிறிஸ்டோ தோட்டத்தில் நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
9 வயதான சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் உள்ள குழந்தை ஒன்றுக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது சேலையில் கழுத்து இறுதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.