நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயப்பாட்டினை தடுப்பதற்காக பாரிய ஒரு வேலைத்திட்டத்தினை சிறுவர் பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மகளிர் பிரிவு கிராம சேவகர்கள் உள்ளிட்டவர்களை கொண்டு முன்னெடுக்க உள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர்.கே.கே .ரவி தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பெற்றோர்களின் நிதி உதவியில் இயங்கி வந்த நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 95 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தனது சொந்த நிதியில் அரசி, பருப்பு, சோயாமீட், மா உள்ளிட்ட அத்தியவிசிய பொருட்கள் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளரின் சொந்த நிதியிலிருந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருதன.
இந்நிகழ்வு இன்று (23) பொகவந்தலாவை ஆரம்ப சிறுவர் பராய கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது அதில் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
அரசாங்கம் இன்று சிறுவர்களை பாதுகாப்பதற்காக உரிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் அது நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன. இன்று ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போல் எமது மலையகத்தில் மாத்திரம் தான் சிறுவர் தொழிலில் அமர்த்தப்படுகின்றனர் என்பதில் உண்மைக்கிடையாது ஆகவே இந்த அரசாங்க சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களை தெளிவு படுத்தி சிறுவர்களை வேலை அமர்த்துவதை தடுப்பதற்கு பாலர் பாடசாலை ஆசிரியர்களாகிய நீங்களும் எமக்கு ஒத்துழைக்க வேண்டும். ஏன்னென்றால் ஆரம்ப கட்ட கல்வி செயப்பாகளிலும் பெற்றோருடன் நேரடி தொடர்பிலும் நீங்கள் தான் உள்ளீர்கள்.
உங்களுக்கு தெரியும் அண்மையில் டயகம பகுயில் சிறுமி ஒருவர் முன்னாள் அமைச்சர் ரீசாட் பதூர்தீன் அவர்களின் வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்தார்களா என்ற சம்பவம் முழு மலையகத்தினை உலுக்கியுள்ளது. ஆகவே இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் எமது பிரதேசத்தில் நடைபெறக்கூடாது. அதற்காக நாம் ஒன்றிணைந்து செயப்பட வேண்டும். அதே நேரம் உங்களுக்கு தெரியும் பொகவந்தலா பகுதியில் இன்று பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்படுகின்றன நோர்வூட் முதல் கெம்பியன் வரை பிரதான பாதை மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அதே போன்று கிவ், ராணிக்காடு தோட்டப்பாதைகள் எவ்வாறு இருந்தது என்று உங்களுக்கு தெரியும் அவை அனைத்தும் இன்று காபட் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது அது மாத்திரமின்றி இன்று பல வேலைத்திட்டங்கள் எமது பிரதேச சபையினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த எந்த வேலைத்திட்டத்திலும் கட்சி தொழிற்சங்க பேதமின்றியே நான் சேவையாற்றி வருகிறேன். இந்த நான்கு வருடபகுதியில் இந்த பிரதேசத்தில் சகல உட்டகட்டமைப்பு வசதிகளும் கல்வி கற்பதற்குரிய வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் அப்போது இந்த பிரதேசம் தானாக வளர்ச்சி பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வு பிரிடோ நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்டமுகாமையாளர் என.கருணாகரன் இணைப்பாளர் அமரசெல்வம் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்