நோர்டன் பிரிட்ஜிலிருந்து கினிகத்தேனை, தியகல வழியாக சிவனொளிபாதமலை வரை செல்லும் பாதை எதிர்வரும் 10 நாட்களுக்கு மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நோர்ட்டன் பிரிட்ஜ் என அழைக்கப்படும் குறித்த பாலம் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதன் காரணமாக அதனை புனரமைக்கும் பணிகளுக்காக பாதை மூடப்படவுள்ளதாக குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (14) முதல் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி வரை எதிர்வரும் 10 நாட்களுக்கு பாதையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் கொழும்பிலிருந்து குறித்த பாதை ஊடாக பயணிக்கும் சாரதிகள் கலுகல, பொல்பிட்டிய, லக்சபான மற்றும் ஹட்டன் நோர்டன் பிரிட்ஜ் வழியாக குறித்த பாதையை பயன்படுத்துமாறு நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.