சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்

0
179

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு வருகை தந்த பெண் ஒருவர் திடீர் என மரணித்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 19.01.2019.சனிகிழமை காலை இடம்பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக குழுவோடு வருகை தந்த பெண் 46வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பொல்கஸ் ஓ விட்ட பகுதியை சேர்ந்த
கே.ஜே.சந்ராவத்தி என்ற பெண்ணே இவ்வாறு உயரிழந்துள்ளதாக நல்லதண்ணி
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சிவனொளிபாதமலை அடிவாரத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு செல்லும் வழியிலே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் உயிர் இழந்த பெண்ணின் சடலம்
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு
சட்டவைத்திய அதிகாரியின் பிரரேத பரீசோதனையின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here