சீதுவ கொலைச் சம்பவம் – 7 சந்தேக நபர்கள் கைது

0
9

சீதுவ, எரியகஹலிந்த பகுதியில் கடந்த 12ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஐந்து சந்தேக நபர்களையும் குறித்த நபர்களுக்கு உதவியாக இருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மூன்று கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சீதுவ பகுதியைச் சேர்ந்த 17,18,21,25,27,44 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here