சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று நள்ளிரவு ரிக்டர் அளவுகோலில் 7. 2இல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 06 பேர் காயமடைந்ததுடன் 120 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீனா – கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள அக்சு மாகாணத்தில் உள்ள உச்சூர்பன் கவுண்டியில் அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 200 மீட்புப்படையினர் நிலநடுக்க மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி முதல் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த ஆறு பேரில், இருவர் பலத்த காயம் அடைந்தனர், நான்கு பேர் சிறுவர்கள். 47 வீடுகள் இடிந்து விழுந்தன, 78 வீடுகள் பகுதயளவில் சேதமடைந்துள்ளன விவசாய கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன.