கடுமையாக முயற்சித்த போதிலும் நீண்ட நேரம் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், இறுதியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் Panzhou நகர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் தென் பிராந்திய மாகாணமான Guizhou மாகாணத்தின் Panzhou நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
Guizhou நிலக்கரி சுரங்கத்தில் ஒரே நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், கடுமையாக முயற்சித்த போதிலும் நீண்ட நேரம் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், இறுதியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் Panzhou நகர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தில் இருந்த சிலர் பாதகாப்பாக உயிர் தப்பியதாகவும் எனினும் 16 பேர் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Panzhou நகரில் இயங்கும் நிலக்கரி நிறுவனத்திற்கு 7 நிலக்கரி சுரங்கங்கள் இருப்பதுடன் மொத்தமாக 17.3 தொன் நிலக்கரியை உற்பத்தி செய்து வருவதாக அந்த நிறுத்தின் அதிகாரி கூறியுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட நிலக்கரி சுரங்கம் ஆண்டுக்கு 52.5 மெட்ரிக் தொன் நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. இது சீனாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் ஐந்து சதவீதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.