சுஜீவவுக்கு பிணை!

0
6

சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோதமாக ஒழுங்கு செய்யப்பட்ட சொகுசு வாகனம் பற்றிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.

இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

சேனசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னர் அறிவுறுத்தியிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், மனோ கணேசன், முஜிபுர் ரகுமான் உட்பட பலர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here