பிக் பாஸ் 5ல் இருந்து இந்த வாரம் மதுமிதா எலிமினேட் ஆகி இருக்கிறார். வீட்டில் மற்ற போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்ட ராஜூ முதல் ஆளாக காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.
படிப்பு முக்கியமில்லை மானமும், உசுரும் முக்கியம்
எதிர்பார்த்தது போலவே மதுமிதா இன்று பிக் பாஸ் 5ல் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.
நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டில் ஒரு விருது விழா நடத்தப்பட்டது. அதில் ராஜூவுக்கு முதலில் Best entertainer என பட்டம்கொடுத்தனர் . அதன் பிறகு அவரை அசிங்கப்படுத்தும் வகையில் தான் சில விருதுகள் வழங்கப்பட்டது.
புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி, mixture சாப்பிடுகிறார் என பல மோசமான விருதுகளை ராஜுவுக்கு கொடுத்தனர். அதன் பின் அவர் ஓப்பனாக பேசுவதில்லை என சொல்லி தலையில் தண்ணீர் ஊற்றி தண்டனையும் கொடுத்தார்கள்.
ஆனால் வெளியில் ரசிகர்கள் நினைப்பது வேறு என சொல்லி கமல் முதல் ஆளாக அவரை காப்பாற்றி இருகிறார். அது மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய நோஸ்கட் ஆக இருந்திருக்கும்.
ஜெர்மனியில் இருந்து வந்து பிக் பாஸில் கலந்துகொண்டிருக்கும் மதுமிதா தான் இன்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு மொழி பிரச்சனை அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. நான் பேச நினைப்பதை சரியாக பேசி புரியவைக்கமுடியவில்லை என சொல்லி நேற்று மதுமிதா நிரூப்பிடம் கண்ணீர் விட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து தான் அவர் இன்று எலிமினேட் ஆகி இருக்கிறார்.