சூரி நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ரவிக்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது. 2015-ம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளத்தை பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதையினை உருவாக்கியுள்ளார் ரவிக்குமார்.




