ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சௌபாக்யா வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரப்பத்தனை பிரதேசசபைக்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டுட் நிகழ்வு 03/02/2022 ஆரம்பிக்கப்பட்டது.
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆட்லோ பாதை மற்றும் டொரிங்டன் பாலத்தை புனரமைப்பதற்கான அடிக்கல் குறித்த பகுதி வட்டர உறுப்பினர் ராமன் கோபால் தலைமையில் நாட்டப்பட்டது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபச்செயலாளர் சச்சுதானந்தன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த்