ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியீடு

0
187

கீழ் கண்ட சேவைகள் நேற்று முதல் அத்தியாவசிய சேவைகள் ஆக்கப்பட்டுள்ளன. மின்சாரம், பெற்றோலியம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில், கீழ் கண்ட சேவைகள் நேற்று முதல் அத்தியாவசிய சேவைகள் ஆக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு

மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் வாய்ப்பு என்பனவாகும்.

வர்த்தமானி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here