டிசம்பரில் திருமணத்திற்கு தயாராகவிருந்த யுவதி விபத்தில் பலி – தெற்கு அதிவேக விபத்தில் சோகம்!

0
10

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் கஹதுடுவ சந்திப்புகளுக்கு இடையில் இன்று (16) அதிகாலை 08 பேரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று குளிர்சாதன பெட்டியுடன் கூடிய லாரியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் 32 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 07 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மற்ற மூவரும் சிறுவர்கள் எனவும் அவர்கள் மூவரும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

13, 11 மற்றும் 07 வயதுடைய மூன்று குழந்தைகள் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் வணிகத் துறையில் பணிபுரிந்து வருபவர் ஆவார்.

புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பெண் , டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.

ஹோமாகம மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பெண், வெளிநாட்டிலிருந்து தனது வருங்கால கணவரை அழைத்து வருவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்த இளம் பெண் வேனின் முன் இடது இருக்கையில் பயணித்ததாகவும், அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த இளைஞன் வேனின் ஓட்டுநராக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் வேன் கடுமையாக சேதமடைந்ததாகவும், லாரியின் பின்புற வலது பக்கம் சிறிய சேதத்தை சந்தித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக லொரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் இன்று (16) ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வேனின் ஓட்டுநர் நிதிதிரை கொண்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here