முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண அவர்களைப் பிரதானியாக கொண்டு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீடத்தின் தமிழ்ப் பிரிவு அங்குரார்ப்பணம் மற்றும் மற்றும் கட்சி தலைமை செயலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்பு விழா என்பன அண்மையில் (01) எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினது பங்கேற்புடன் விமர்சியாக இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, கெளரவ புத்திக பத்திரண, மேன்மைதங்கிய கெளரவ டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீட தமிழ்ப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி, தமிழ்ப் பிரிவு ஆலோசகர் ஜோன் ராம், கொழும்பு மாநாகர சபை உறுப்பினரும், கட்சியின் பிரதி செயலாளர்களில் ஒருவரும், தமிழ்ப் பிரிவின் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் உட்பட அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




