அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு செல்லும் பாதையின் பாலம் நடுவே பழுந்தடைந்து மக்களின் போக்குவரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கியது.இந்நிலையில் குறித்த வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தனிடன் கோரிக்கை வைத்தமைக்கு இணங்க தன் சொந்த நிதியில் பாலத்தை புனரமைத்துள்ளார்.
குறித்த பகுதியின் இ.தொ.கா உறுப்பினர் உதயன் ஆதரவோடு இவ்வேலைத்திட்டம் தற்போது முழுமைப்பெறும் தருவாயில் காணப்படுவதோடு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியமைக்காக சச்சுதானந்தனுக்கு டொரிங்டன் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்



