தடுப்பூசி செலுத்திய 4 மாத குழந்தை உயிரிழப்பு

0
244

தடுப்பூசி செலுத்தி ஒருநாளைக்கு பின்னர் திடீரென சுகவீனமடைந்ததாக கூறப்பட்ட , 4 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

4 மாத குழந்தைக்கு பண்டுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்றட்டுள்ளதுடன், உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னரும் குறித்த குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.

பின்னர் அந்த குழந்தையை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழந்தையின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here