தட்டுப்பாடு ஏற்படாது – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்!

0
3

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது.

இதன்படி, அடுத்த இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருளை முன்பதிவு செய்துள்ளோம் என்பதை பொதுமக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். அந்த முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

எந்த காரணத்தாலும் இந்த நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை இருக்காது. இரண்டு மாதங்களின் பின்னர் எங்கிருந்து எரிபொருள் பெறுவது என்பதுதான் பிரச்சினை.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here