தந்தத்தில் செய்யப்பட்ட ராணி சிலை 5 மில்லியன் – விற்க முயன்ற நபர் கைது

0
251

இரத்தினபுரி, பாலபத்தல என்ற இடத்தில் தந்தத்தில் செய்யப்பட்ட ராணி சிலையை சமூக ஊடகங்கள் ஊடாக ரூ.5 மில்லியனுக்கு விற்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முகாமில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப்படையினர், 46 வயதுடைய சந்தேக நபரை இரத்தினபுரி பாலபத்தல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

யானைத் தந்தத்தால் செதுக்கப்பட்ட சிலை 11 அங்குல உயரமும் 1.5 கிலோவுக்கும் அதிகமான எடையும் கொண்டது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சிறிபாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here