மாஹோ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகொல்லாகம பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகன், தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
சம்பவத்தில் பலகொல்லாகம-பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை மாஹோ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மாஹோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.