தனியார் பேருந்தின் சாரதியின் மூக்கை கத்தியால் கீறி தப்பிச் சென்ற நபருக்கு பொலிஸார் வலைவீச்சு

0
208

யாழில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் பேருந்தின் சாரதியின் மூக்கை கத்தியால் கீறி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

அச்சந்தேக நபர் நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்தே இவ்வாறு கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

பேருந்து நீர்வேலி கந்தசாமி ஆலயத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கத்தி வெட்டுக்கு இலக்கான சாரதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here