ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் நாளை (10) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை மீண்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏனைய பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.