தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலநடுக்கம்

0
146

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (12)காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காலை 7.39 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.பூமிக்கு அடியில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை செங்கல்பட்டு மட்டுமன்றி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாணியம்பாடியில் காலை 7.35 மற்றும் 7.42 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here