தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தலவாக்கலை லோகி தோட்டத்தில் பெண்களுக்கான தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி இன்று (05) தேயிலை தோட்ட தேயிலை மலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
குறித்த தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டியில் லோகி பிரிவு, கூம்மூட், நடுப்பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியாளர்களை பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வாகனத்தில் அழைத்துவரப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இரண்டு சுற்றுக்களாக நடத்தப்பட்ட போட்டியில் முதல் சுற்றில் 15 பேரில் 09 பேரும் இரண்டாவது சுற்றில் ஒன்பது பேரிலிருந்து முதலாம்;,இரண்டாம் மூன்றாம் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முதல் சுற்றில் போட்டியிட்ட போட்டியாளர் ஒருவர் 4 கிலோகிராம் 20 கிராம் தேயிலை கொழுந்தினை சுமார் 15 நிமிடங்களில் பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டிகள் தேயிலையினை துறையினை பாதுகாத்து அதன் மூலம் வர்மானத்தினை ஈட்டிக்கொள்ள ஊக்கப்படுத்துவதற்காகவும் தொழிலாளர்களை உட்சாகப்படுத்துவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹேலிஸ் கம்பனியின் அனுசரணையில் தோட்ட முகாமையாளர் உச்சிர உடுத்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த போட்டி நிகழ்வுக்கு தோட்ட உதவி முகாமையாளர்கள்,தோட்ட கள உத்தியோகஸ்த்தர்கள்,மனிவள அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த போட்டியினை தொடர்ந்து ஆண்களுக்கு கைப்பாந்தாட்ட போட்டியொன்று இடம்பெற்றன
மலைவாஞ்ஞன்