காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும். விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பறவைகள் கொண்டுவரப்பட்டன.
காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் சுமார் 60 கிலோ எடை கொண்டது, இது பெரும்பாலும் “உலகின் மிகவும் ஆபத்தான பறவை” என்று பெயரிடப்பட்டுள்ளது.
தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பறவைகள் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குரங்குகள், காட்டுப் பறவைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளையும் இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது.
இந்நிலையில், 22 வருடங்களின் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலிருந்து மீண்டும் தனது தாய் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட முத்துராஜா யானை தற்போது தாய்லாந்து மன்னரின் ஆதரவில் இருப்பதால் மீளவும் இலங்கைக்கு திரும்பாது என அந்நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா தெரிவித்துள்ளார்.