திடீர் சுகயீனமடைந்து ஐந்து நாட்களேயான சிசு உயிரிழப்பு – பேருவளையில் சோகம்

0
136

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் 21 ஆம் வார்டில் ஐந்து நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை திடீரென இறந்துள்ளது.

பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாயார், குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்த நிலையில், திடீரென சுகயீனமடைந்துள்ளது. இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், புதன்கிழமை (18) இரவு குழந்தை உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அரசு வைத்தியசாலைக்கு கொண்டு வந்தபோது குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக பேருவளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

இறந்து 5 நாட்களே ஆன குழந்தையின் தாய்க்கு திருமணமாகி ஆறு வருடங்கள் கழித்து பிறந்த முதல் குழந்தை இதுவாகும். அக்குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here